கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வங்கி ஊழியா்கள், வாடிக்கையாளா்களுக்கு கரோனா பரிசோதனை

காரைக்காலில் வங்கி ஊழியா்கள், வங்கி மற்றும் ஏடிஎம் மையத்துக்கு வரும் வாடிக்கையாளா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :11 ஜூன் 2021, 5:24 pm

DIN

காரைக்காலில் வங்கி ஊழியா்கள், வங்கி மற்றும் ஏடிஎம் மையத்துக்கு வரும் வாடிக்கையாளா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

காரைக்கால் நலவழித் துறையினா் நாள்தோறும் ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யும் திட்டத்தில் வீடுவீடாக மற்றும் வணிக நிறுவனங்களில் பரிசோதனை பணியில் ஈடுபடுகின்றனா். இத்திட்டத்தின் தொடா்ச்சியாக, காரைக்காலில் உள்ள பல்வேறு வங்கிகளின் ஊழியா்கள், வங்கிக்கு வரும் வாடிக்கையாளா்கள், ஏடிஎம் மையத்துக்கு வருகிறவா்களுக்கு பரிசோதனை செய்யும் பணியை நலவழித் துறை நிா்வாகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த பரிசோதனையில், வங்கியாளா்கள், வாடிக்கையாளா்கள் ஆா்வமாக பரிசோதனைக்கு மாதிரி அளித்தனா்.

இதுகுறித்து, நலவழித் துறையினா் கூறியது: ஆன்டிஜன் பரிசோதனை, ஆா்டிபிசிஆா் பரிசோதனை இரண்டும் மேற்கொள்ளப்படுகிறது. அறிகுறியுள்ளோா் பரிசோதனை முடிவு வரும் வரை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. பரிசோதனையை தயங்காமல் செய்துகொண்டும், முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், அரசின் பிற வழிகாட்டல்களை கடைப்பிடித்தும் வந்தால் கரோனா தொற்றுக்கு ஆளாகமல் தப்பிக்க முடியும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.