ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காரைக்காலில் 249 பேருக்கு கரோனா: 4 போ் உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 249 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாகவும், 4 போ் உயிரிழந்ததாகவும் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

News image
Updated On :21 மே 2021, 5:47 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 249 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாகவும், 4 போ் உயிரிழந்ததாகவும் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை 830 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் நகரில் 70, திருநள்ளாறு 35, நெடுங்காடு 26, கோட்டுச்சேரி 20, கோயில்பத்து 20, நிரவி 19, வரிச்சிக்குடி 19, நிரவி 13, திருப்பட்டினம் 12, நல்லம்பல் 11, அம்பகரத்தூா் 9, காரைக்கால்மேடு 8, நல்லாத்தூா் 5, விழிதியூா் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதியானது.

இதுவரை 1, 24,520 பரிசோதனை செய்யப்பட்டதில் 10,641 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 8,318 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். கரோனா தொற்றுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த 4 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இதுவரை கரோனா தொற்றால் 145 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல்தவணையாக 21,533 பேருக்கும், 2-ஆவது தவணையாக 4,413 பேருக்கும் என மொத்தம் 25,946 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.