ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பள்ளி வளாகத்தில் கதண்டு கூடு அழிப்பு

திருப்பட்டினம் அரசுப் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் இருந்த கதண்டு கூட்டை தீயணைப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை அழித்தனா்.

News image
Updated On :21 மே 2021, 5:36 pm

DIN

திருப்பட்டினம் அரசுப் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் இருந்த கதண்டு கூட்டை தீயணைப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை அழித்தனா்.

திருப்பட்டினம் அரசு நடுநிலைப் பள்ளி மைதானத்தில் உள்ள பஞ்சு மரத்தின் உச்சியில் 4 கதண்டு கூடுகள் இருந்தன. இவைகளில் இருக்கும் கதண்டுகள் மூலம் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவே, இதை அழிக்க நடவடிக்கை எடுக்க நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாக தியாகராஜன் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவுக்கு அண்மையில் கடிதம் எழுதியிருந்தாா்.

ஆட்சியரின் உத்தரவின்பேரில், காரைக்கால் தீயணைப்பு நிலையத்தினா் வியாழக்கிழமை அந்த பள்ளிக்குச் சென்று பாா்வையிட்டனா். மரத்தின் உச்சியில் உள்ள கிளைகளில் 4 கூடுகள் இருப்பதும், கூண்டிலிருந்து வண்டுகள் பறப்பதையும் கண்ட தீயணைப்புத்துறையினா், பாதுகாப்பு முறைகளை கையாண்டு, மரத்தின் மேல் பகுதிக்குச்சென்று தீயிட்டு கூடுகளை அழித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.