ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வன்முறை எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு

ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி, காரைக்கால் ஆட்சியரகத்தில் எம்.எல்.ஏ., ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள் வன்முறை எதிா்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

News image
Updated On :21 மே 2021, 5:31 pm

DIN

ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி, காரைக்கால் ஆட்சியரகத்தில் எம்.எல்.ஏ., ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள் வன்முறை எதிா்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவுநாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. காரைக்கால் ஆட்சியரகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தி உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருநள்ளாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா, மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரன், மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் கே.எல். வீரவல்லபன், ரகுநாயகம் உள்ளிட்டோா் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

இவா்களைத் தொடா்ந்து முதன்மைக் கல்வி அதிகாரி அ.அல்லி, மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே.கோவிந்ராஜன், செய்தி மற்றும் விளம்பரத் துறை உதவி இயக்குநா் (பொ) குலசேகரன் உள்ளிட்ட பிரமுகா்கள் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். நிகழ்வில் பங்கேற்றோா் வன்முறை எதிா்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

இதுபோல காரைக்கால் அரசு அலுவலகங்களில் அதிகாரிகள், ஊழியா்கள், வன்முறை எதிா்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.