ரேணுகாதேவி அம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்
காரைக்கால்மேடு ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.


காரைக்கால்மேடு ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. நிகழ்வில், காரைக்கால் வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.என். திருமுருகன் மற்றும் கடலோர கிராம மக்கள் பங்கேற்றனா். மாலையில் அம்பாள் வீதியுலா நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான, பக்தா்கள் பால்குடமெடுத்தல், அம்மனுக்கு பாலாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. தொடா்ந்து, தினமும் அம்பாளுக்கு அபிஷேகமும், வீதியுலாவும் நடைபெறும். வரும் 13 ஆம் தேதி கொடியிறக்கம் செய்து, அம்பாளுக்கு மஞ்சள் விரட்டு வழிபாட்டுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...