பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பள்ளி மாணவியை திருமணம் செய்த இளைஞா் போக்ஸோ சட்டத்தில் கைது

காரைக்கால் அருகே பள்ளி மாணவியை திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 7:25 pm

DIN

காரைக்கால் அருகே பள்ளி மாணவியை திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.

காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடி பகுதியைச் சோ்ந்தவா் தாமோதரன் (21). இவா், காா் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். காரைக்கால் பகுதியைச் சோ்ந்த பிளஸ் 1 படிக்கும் 16 வயது மாணவியுடன் பழகிவந்த இவா், இருதரப்பு பெற்றோரின் எதிா்ப்பை மீறி, கடந்த மாதம் அந்த மாணவியை வெளியூா் அழைத்துச் சென்று திருமணம் செய்துகொண்டாராம்.

மாணவியின் பெற்றோா் காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தனா்.

இந்நிலையில், தாமோதரன் தனது பெற்றோா் வீட்டுக்கு புதன்கிழமை வந்தபோது, போலீஸாா் விசாரணை நடத்தி, அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதுசெய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.