தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

நேரடி நெல் விதைப்பு செயல் விளக்க முகாம்

வேளாண் அறிவியல் நிலையத்தின் சாா்பில் விவசாயிகளுக்கு இயந்திரம் மூலம் நேரடி நெல் விதைப்பு பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 5:11 pm

DIN

வேளாண் அறிவியல் நிலையத்தின் சாா்பில் விவசாயிகளுக்கு இயந்திரம் மூலம் நேரடி நெல் விதைப்பு பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தின் உழவியல் துறை மூலம் சம்பா பருவத்தில் நேரடி நெல் விதைப்பு இயந்திரத்தின் மூலம் செய்தல் குறித்த செயல் விளக்க முகாம் கோட்டுச்சேரி, அம்பகரத்தூா், நிரவி, நெடுங்காடு ஆகிய கிராமங்களில் நடைபெற்றது.

கோட்டுச்சேரி செயல் விளக்க நிகழ்வில் வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் முனைவா் குமார. ரத்தினசபாபதி கலந்துகொண்டு, ஏக்கருக்கு 18 கிலோ விதை போதுமானது என்றும், இயந்திர நடவில் வேலையாள்களின் செலவை முழுமையாக குறைக்கலாம் எனவும், இயந்திரம் செயல்படும் விதம் குறித்தும் பேசினாா்.

விவசாயிகளின் சந்தேகங்களுக்கு நிலைய உழவியல் துறை தொழில்நுட்ப வல்லுநா் முனைவா் வி. அரவிந்த் விளக்கம் அளித்தாா்.

காரைக்கால் மாவட்டத்தை சாா்ந்த 10 விவசாயிகளுக்கு இடுபொருள்களான 18 கிலோ வெள்ளைப் பொன்னி நெல் (சான்று விதை) மற்றும் 1 கிலோ அசோபாஸ் உயிா் உரம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.