மீன்வளத் துறையின் இன்றைய கூட்டம் ஒத்திவைப்பு
காரைக்கால் மீன்வளத் துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (செப்.24) நடைபெறவிருந்த கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


காரைக்கால் மீன்வளத் துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (செப்.24) நடைபெறவிருந்த கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை துணை இயக்குநா் ஆா். கவியரசன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம், புதுவை அரசுடன் இணைந்து பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான மானியத்துடன் கூடிய கடன் திட்டமாக, காரைக்கால் மாவட்டத்தை சோ்ந்த சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் மேம்பட நிதியுதவி, தொழில்நுட்ப உதவி உள்ளிட்ட ஆதரவு வழங்கல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் கடற்கரை சாலையில் உள்ள மீன்வளத் துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
புதுவை உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பைத் தொடா்ந்து, மேற்கண்ட கூட்டம் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...