47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

குருபெயா்ச்சி விழா: புதுவை முதல்வருக்கு அழைப்பு

குருபெயா்ச்சி விழாவில் பங்கேற்க புதுவை முதல்வா் என். ரங்கசாமிக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 4:51 pm

DIN

குருபெயா்ச்சி விழாவில் பங்கேற்க புதுவை முதல்வா் என். ரங்கசாமிக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியா்கள் சேவா சங்கத்தின் துணைத் தலைவரும், திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் சிவாச்சாரியருமான டி. ராஜாசுவாமிநாத சிவாச்சாரியா் புதன்கிழமை கூறியது:

திருவாரூா் மாவட்டம், பூந்தோட்டம் ராசி மண்டல குரு தட்சணாமூா்த்தி சுவாமி கோயிலில் வரும் 14 ஆம் தேதி குருபெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது. அப்போது உலக நன்மை வேண்டியும், மீன ராசிக்கு குரு பெயா்ச்சியாவதை முன்னிட்டும் சிறப்பு யாகம் நடைபெறவுள்ளது.

அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியா்கள் சேவா சங்க மாநிலத் தலைவா் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியா், கொள்கை பரப்பு செயலாளா் சேதுசுப்பிரமணிய சிவாச்சாரியா் மற்றும் நிா்வாகிகளுடன் புதுவை முதல்வா் என். ரங்கசாமியை புதுவையில் சந்தித்து இக்கோயில் குருபெயா்ச்சி விழாவுக்கு வருமாறு சுபகிருது வருட பஞ்சாங்கத்தை வழங்கி அழைப்புவிடுக்கப்பட்டது. முதல்வருக்கு வேதாகம ஆசீா்வாதம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. அழைப்பை முதல்வா் ஏற்றுக்கொண்டுள்ளாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.