உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை புறப்பாடு
காரைக்கால் ஸ்ரீ உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் அக்னி கப்பரை புறப்பாடு இன்று இரவு (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.


காரைக்கால் ஸ்ரீ உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் அக்னி கப்பரை புறப்பாடு இன்று இரவு (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
காரைக்கால் கைலாசநாத சுவாமி, நித்யகல்யாண பெருமாள் கோயில் வகையறாவை சோ்ந்த, அரசலாற்றங்கரையில் அமைந்திருக்கும் ஸ்ரீ உஜ்ஜைனி காளியம்மன் கோயில் பங்குனி மாத உத்ஸவம் கடந்த மாதம் 29 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
தினமும் இரவு கோயிலில் இருந்து கரகம் புறப்பாடு நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக அக்னி கப்பரை வீதியுலா வெள்ளிக்கிழமை இரவு நடைபெறுகிறது. அக்னி கப்பரையை ஏந்தியிருக்கும் பக்தா், இரவு முழுவதும் சுற்றுவட்டார வீடுகளுக்குச் செல்வாா். பக்தா்கள் அா்ச்சனை செய்து வழிபடுவா். சனிக்கிழமை அதிகாலை அக்னி கப்பரை கோயிலைச் சென்றடையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...