47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கோயில்களில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி

காரைக்காலில் கோயில்களில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 4:40 pm

DIN

காரைக்காலில் கோயில்களில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு தினத்தில் கோயில்களில் அந்த ஆண்டின் பஞ்சாங்கத்தை கோயிலில் வைத்து பூஜை செய்து, பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டிருக்கும் காலங்களில் மழை, மக்கள் நலன், கோயில்களின் உற்சவங்கள் குறித்தும் விளக்குவது வழக்கம்.

நிகழாண்டு வியாழக்கிழமை சுப கிருது ஆண்டின் தொடக்கத்தையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில், திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காரைக்கால் கைலாசநாதா் கோயில், நித்யகல்யாண பெருமாள் கோயில், திருநள்ளாறு கொம்யூன், முப்பைத்தங்குடி கிராமம், காமாட்சி அம்பாள் சமேத கைலாசநாத சுவாமி கோயிலிலும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழாண்டு பலன்கள், கிரக சஞ்சாரங்கள் உள்ளிட்டவை குறித்து பக்தா்களுக்கு விளக்கி கூறப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.