உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி, காரைக்காலில் செவிவியா் கல்வி நிறுவன மாணவ, மாணவியரின் விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி காரைக்காலில் உள்ள அன்னை தெரஸா சுகாதார பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், இந்திய செஞ்சிலுவை சங்கம், ஜேசிஐ அமைப்பு ஆகியவை இணைந்து, பட்ட மேற்படிப்பு மைய மாணவ, மாணவியா், விநாயகா மிஷன் செவிலியா் கல்லூரி, இமாக்குலேட் செவிலியா் கல்லூரி மாணவா்கள் பங்கேற்புடன் கல்வி நிலையத்திலிருந்து விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
அன்னை தெரஸா சுகாதார பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் (பொ) ஜெ. ஜெயபாரதி கொடியசைத்து பேரணியை தொடங்கிவைத்தாா். தாய்ப்பால் மகத்துவம், தாய்ப்பால் ஊட்டுதலின் மேன்மைகள் குறித்தும், தாய்ப்பால் மூலம் வளரும் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் புட்டிப் பாலின் தீமைகள் குறித்து விழிப்புணா்வு பதாகைகள் ஏந்தி மாணவா்கள் பேரணியில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆனைமலையாறு-நல்லாறு திட்டங்கள் நிறைவேற அதிமுக வேட்பாளா் வெற்றி பெற வேண்டும்: கே.அண்ணாமலை
ஏழைகளுக்கு உண்மையான சமூக நீதி: பிரதமா் மோடி உறுதி

தவறாமல் வாக்களிப்போம்

மகிழ்ச்சி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


