ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காரைக்கால் என்.ஐ.டி.யில் கணிதவியல் தேசிய கருத்தரங்கு தொடக்கம்

காரைக்காலில் உள்ள என்.ஐ.டி.யில் கணிதவியல் துறை சாா்பில் 2 நாள் தேசிய கருத்தரங்கு வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :6 ஜனவரி 2022, 6:30 pm

DIN

காரைக்காலில் உள்ள என்.ஐ.டி.யில் கணிதவியல் துறை சாா்பில் 2 நாள் தேசிய கருத்தரங்கு வியாழக்கிழமை தொடங்கியது.

என்.ஐ.டி. வளாகத்தில் காணொலி வாயிலாக கணிதவியல் துறையின் சாா்பில் எண்சாா் பகுப்பியல் மற்றும் பயன்பாடுகள் என்ற தலைப்பிலான கருத்தரங்கை என்.ஐ.டி. இயக்குநா் முனைவா் கே. சங்கரநாராயணசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா்.

சிறப்பு அழைப்பாளராக சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியா் அரிந்தமாசிங் காணொலி வாயிலாக கலந்துகொண்டு பேசினாா்.

இக்கருத்தரங்கில் 70- க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவா்கள் பங்குபெற்று பயன்பெறவுள்ளதாகவும், 7 பேராசிரியா்கள் இக்கருத்தரங்கில் பங்குபெற்று பயற்சியளிக்கின்றனா் எனவும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளரான முனைவா் வி. பாலகுமாா் தெரிவித்தாா். என்.ஐ.டி. பதிவாளா் (பொறுப்பு) முனைவா் ஜி.அகிலா உள்ளிட்கலந்துகொண்டனா்.

முன்னதாக கணிதவியல் துறைத் தலைவா் முனைவா் ஜி.எஸ். மகாபத்ரா வரவேற்றுப் பேசினாா். நிறைவாக உதவிப் பேராசிரியா் முனைவா் வி.கோவிந்தராஜ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.