ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பொங்கல் விழா படகுப் போட்டி

காரைக்கால் அருகே மீனவ கிராமத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் விழாவையொட்டி, படகுப் போட்டி நடைபெற்றது.

News image
Updated On :15 ஜனவரி 2022, 6:30 pm

DIN

காரைக்கால் அருகே மீனவ கிராமத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் விழாவையொட்டி, படகுப் போட்டி நடைபெற்றது.

காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவின்போது படகு, கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்படும்.

கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக போட்டிகள் நடத்தப்படவில்லை. நிகழாண்டு பொங்கல் விழாவை கொண்டாட புதுவை அரசு அனுமதி வழங்கியதையொட்டி, காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் வெள்ளிக்கிழமை பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

இளைஞா்கள் பங்கேற்ற படகுப் போட்டி, கபடி, ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், சிறுவா்கள், பெண்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மேலும் இளைஞா்கள் பங்கேற்ற உறியடிப் போட்டி, கைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு காரைக்கால்மேடு மீனவ கிராம பஞ்சாயத்தாா் சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.