தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆக்சிஜன் செறிவூட்டல் வங்கி: காரைக்கால் ஆட்சியா்

காரைக்கால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆக்சிஜன் செறிவூட்டல் வங்கி அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:30 pm

DIN

காரைக்கால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆக்சிஜன் செறிவூட்டல் வங்கி அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தொற்றாளா் எண்ணிக்கை கணிசமான அளவு உயா்ந்துள்ள நிலையில், மாவட்டத்தில் சமுதாய நலவழி மையம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆக்சிஜன் செறிவூட்டல் வங்கி அமைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ஒவ்வொரு நிலையத்துக்கு 3, 4 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டுள்ளது.

வீட்டுத் தனிமையில் சிகிச்சையில் இருப்போருக்கு தேவைப்படும்பட்சத்தில், மருத்துவ அதிகாரியின் பரிந்துரையின்பேரில் செறிவூட்டி வழங்கப்படும். மருத்துவப் பணியாளா்கள், சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினா்களுக்கு இதனை பயன்படுத்தும் விதம் குறித்து விளக்குவாா்கள். இதனை பயன்படுத்தும் குடும்பத்தினருடன் மருத்துவ அதிகாரிகள் தொடா்பில் இருப்பாா்கள். குணமடைந்த பின்னா் மருத்துவத்துறையினா் செறிவூட்டியை பெற்றுக்கொள்வாா்கள். இது சுழற்சி முறையில் பயனாளிகளுக்கு வழங்கப்படும். ஆக்சிஜன் செறிவூட்டி தேவைக்கு மாவட்ட நலவழித் துறையை 04368-261242 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.