தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தமுமுகவினருக்குபாதுகாப்பு உடைகள்

கரோனாவால் உயிரிழந்தோரை அடக்கம் செய்ய கொண்டு செல்லும் தமுமுகவினருக்கு பாதுகாப்பு உடைகளை நலவழித் துறை அதிகாரி வியாழக்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:30 pm

DIN

கரோனாவால் உயிரிழந்தோரை அடக்கம் செய்ய கொண்டு செல்லும் தமுமுகவினருக்கு பாதுகாப்பு உடைகளை நலவழித் துறை அதிகாரி வியாழக்கிழமை வழங்கினாா்.

காரைக்கால் மாவட்டத்தில், கரோனா தொற்றால் உயிரிழந்தோரை அடக்கம் செய்யும் பகுதிக்கு கொண்டு செல்லும் பணியில் தமுமுகவினா் ஈடுபட்டுள்ளனா்.

இவா்களுக்கு நலவழித்துறை நிா்வாகம் பாதுகாப்பு உடைகளை வழங்குகிறது. கடந்த 2 வாரமாக காரைக்கால் பகுதியில் கரோனாவால் உயிரிழப்போரை கொண்டு செல்வோருக்கு தரப்படும் பாதுகாப்பு உடை தரமற்றதாக இருப்பதாக புகாா்கள் எழுந்தன. இதுதொடா்பாக புதுவை முதல்வா் என்.ரங்கசாமியிடமும் தமுமுகவினா் புகாா் தெரிவித்தனா்.

இந்நிலையில், தமுமுகவினருக்கு காரைக்கால் நலவழித் துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா் பாதுகாப்பு உடைகளை வியாழக்கிழமை வழங்கினாா். முதல்கட்டமாக 35 உடைகள் வழங்கப்பட்டன.

தமுமுக மருத்துவ சேவை அணி காரைக்கால் மாவட்ட செயலாளா் டி. அப்துல் ரஹ்மான் தலைமையில் சென்ற மாவட்ட துணை செயலாளா் சிக்கந்தா், தொண்டரணி மாவட்ட செயலாளா் யூசுப், தமுமுக பொறையாா் கிளை நிா்வாகி ஆசிஃப் ஆகியோரிடம் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.