காரைக்கால்: காரைக்கால் வாஞ்சாரு பாலத்தில் இருந்து தவறி விழுந்து உயிருக்கு போராடிய முதியவரை இரு இளைஞர்கள் மீட்டனர்.
காரைக்கால் மாவட்டம் வாரச்சந்தை அருகில் உள்ள வாஞ்சாரு பாலத்தில் இன்று மதியம் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் பாலத்தில் நடந்து வந்து கொண்டிருந்தபோது வெயிலில் தாக்கமும் பசியினால் மயக்கம் அடைந்து பாலத்தில் இருந்து தவறி ஆற்றில் விழுந்தார்.
ஆற்றில் விழுந்தவர் உயிருக்கு போராடிக் கொண்டு சில அடி தத்தளித்து சென்றார். இதனை கண்ட வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கூச்சலிட்டும் விடியோ எடுத்து உள்ளனர்.
அப்போது அந்த வழியாக வந்த கோட்டுச்சேரி பகுதி ஜீவா நகரைச் சேர்ந்த சந்துரு (18), வெங்கடாச்சலம் (19) இரு கல்லூரி இளைஞர்கள் சற்று எதிர்ப்பாராமாக ஆற்றில் குதித்து உயிருக்கு போராடிய முதியவரை மீட்டு அக்கரைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்தனர். பின்பு முதியோரிடம் விசாரித்த போது பசியினால் மயக்கம் அடைந்தது தெரியவந்தது.
மேலும் முதியவர் உயிருக்கு போராடியதை, இளைஞர்கள் மீட்கும் காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி அந்த இரு இளைஞர்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
‘க்வாட்’ கூட்டமைப்பு வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம்: சீனா எதிர்வினை!

பெரும் கவலையளிக்கிறது! தொண்டர்களுக்கு திருமா வேண்டுகோள்! | VCK

எரிபொருள் விலை உயர்வால் கேரளத்தில் பணவீக்கம் அதிகரிப்பு: முதல்வர்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



