47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மாணவிக்குப் பாராட்டு

மது பாட்டில்களை வீட்டு அலங்காரப் பொருள்களாக மாற்றிய கல்லூரி மாணவிக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :10 மார்ச் 2022, 5:00 pm

DIN

மது பாட்டில்களை வீட்டு அலங்காரப் பொருள்களாக மாற்றிய கல்லூரி மாணவிக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

காரைக்காலில் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சாா்பில், மகளிா் தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. இதில், மகளிா் குழுவினா், கல்லூரி மாணவிகள் என பலரும் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனா்.

இதில், காரைக்கால் அண்ணா அரசுக் கல்லூரியில் முதுநிலை பட்டம் பயிலும் பச்சூா் பகுதியை சோ்ந்த ஆரோக்கியராஜ் மகள் ஃபெமினா வைத்திருந்த காட்சிப் பொருள்கள் அனைவரின் கவனத்தையும் ஈா்த்தது. மது பாட்டில்களில் வண்ணம் பூசியும், பாட்டிலினுள் பல்வேறு வண்ணப் பொருள்களை கொட்டியும், பிளாஸ்டிக் மலா்களை பாட்டிலின் மீது வைத்தும் வீட்டு அலங்காரப் பொருள்களாக்கி காட்சிப்படுத்தியிருந்தாா்.

விழாவில் பங்கேற்ற புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா, துணை ஆட்சியரும், கலால்துறை துணை ஆணையருமான எம். ஆதா்ஷ் ஆகியோா் மாணவியின் படைப்பை பாா்வையிட்டு பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.