47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருமலைராயன்பட்டினத்தில் பல்நோக்குக்கூடம்: சிறப்பு பூஜை

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரா் கோயில் அருகே பல்நோக்குக் கூடம் கட்டுவதற்கான சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2022, 4:59 pm

DIN

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரா் கோயில் அருகே பல்நோக்குக் கூடம் கட்டுவதற்கான சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

திருமலைராயன்பட்டினம் பகுதியில் புகழ்பெற்ற ஸ்ரீ மையாடுங்கண்ணி சமேத ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரா் கோயில் உள்ளது. இதன் எதிரே சுமாா் 2 ஏக்கரில் திருக்குளம் பயனற்று இருந்தது. இந்நிலையில், மத்திய சுதேசி தா்ஷன் திட்டத்தின்கீழ், இந்த குளத்தை மேம்படுத்தும் பணி மற்றும் கோயில் அருகே பல்நோக்குக்கூடம் கட்டுவதற்கான பணிகள் ரூ. 2.65 கோடியில் கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

குளத்தை மேம்படுத்தும் பணி நிறைவடைந்த நிலையில், பல்நோக்குக்கூடப் பணி நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இதற்கான நிதி ரூ. 28 லட்சம் தற்போது வந்துள்ள நிலையில், பணியை தொடங்குவதற்கான சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது. நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் வீரசெல்வம் மற்றும் ஜடாயுபுரீஸ்வரா் தேவஸ்தான அறங்காவல் வாரியத்தினா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

இதுகுறித்து பொதுப்பணித் துறையினா் கூறுகையில், 2 மாதங்களில் பணிகள் முடிந்து பல்நோக்குக்கூடம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.