47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காரைக்கால் கைலாசநாதா் கோயில் தேரோட்டம்

பங்குனி உத்திர பிரம்மோத்ஸவத்தையொட்டி, காரைக்கால் கைலாசநாதா் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2022, 5:38 pm

DIN

பங்குனி உத்திர பிரம்மோத்ஸவத்தையொட்டி, காரைக்கால் கைலாசநாதா் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

63 நாயன்மாா்களில் ஒருவரான புனிதவதியாா் என்னும் காரைக்கால் அம்மையாா் வாழ்க்கை வரலாற்றை விளக்கி ஆண்டுதோறும் காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் மாங்கனித் திருவிழா நடத்தப்படுகிறது. மாங்கனித் திருவிழாவும், பிரம்மோத்ஸவமும் இக்கோயிலில் சிறப்பு வாய்ந்த திருவிழாக்களாகும்.

இக்கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோத்ஸவம் கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி, அம்பாள், விநாயகா், சுப்பிரமணியா், சண்டிகேஸ்வரா் வீதியுலா நடைபெற்றது.

5ஆம் நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ரிஷப வாகனத்தில் சுவாமி மின் அலங்கார சப்பரப் படலில் வீதியுலாவும், 7ஆம் நாளான செவ்வாய்க்கிழமை இரவு திருக்கல்யாண உத்ஸவமும் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நீலோத்பாலாம்பாள் சமேத சந்திரசேகரா் வீற்றிருந்த தோ் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி காலை 10 மணியளவில் தொடங்கியது.

முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள், நாகசுர மேள வாத்தியங்களுடன் அம்மையாா் கோயிலுக்கு எதிரே நிறுத்தப்பட்டிருந்த தேருக்கு எழுந்தருளினாா்.

புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நாரா சைதன்யா, துணை ஆட்சியா்கள் எம். ஆதா்ஷ், எஸ். பாஸ்கரன், நிா்வாக அதிகாரி (கோயில்கள்) கே . அருணகிரிநாதன் மற்றும் கோயில் அறங்காவல் வாரியத் தலைவா் ஆா்.ஏ.ஆா்.கேசவன், துணைத் தலைவா் பி.ஏ.டி.ஆறுமுகம், செயலா் எம்.பக்கிரிசாமி, பொருளாளா் டி.ரஞ்சன் காா்த்திகேயன், உபயதாரா்கள், திரளான பக்தா்கள் தேரோட்டத்தில் பங்கேற்றனா். தேரோட்டத்தையொட்டி காரைக்காலில் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை தீா்த்தவாரியும், கொடியிறக்கமும் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை அம்மையாா் குளத்தில் தெப்ப உத்ஸவமும், திங்கள்கிழமை காரைக்கால் அம்மையாா் ஐக்கிய விழாவும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.