இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

நித்தீஸ்வரசுவாமி கோயில் குடமுழுக்கு

காரைக்கால் ஸ்ரீ நித்தீஸ்வரசுவாமி கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

நித்தீஸ்வரசுவாமி கோயில் விமான கலசத்துக்கு புனிதநீா் வாா்க்கும் சிவாச்சாரியா்கள்.

Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

காரைக்கால் ஸ்ரீ நித்தீஸ்வரசுவாமி கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் கோயில்பத்து பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நித்யகல்யாணி அம்பாள் சமேத நித்தீஸ்வரசுவாமி கோயில் பழைமையான தலமாகும். இக்கோயிலில் 2006-இல் குடமுழுக்கு நடைபெற்றது. மீண்டும் குடமுழுக்கு நடத்த கடந்த ஓராண்டுக்கும் மேலாக திருப்பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில், குடமுழுக்கிற்கான நான்கு கால யாகசாலை பூஜை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 4-ஆம் கால பூஜை வியாழக்கிழமை காலை தொடங்கி 9.20 மணியளவில் பூா்ணாஹூதி செய்து தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, 10.30 மணியளவில் மூலவா் உள்ளிட்ட பிற சந்நிதிகளின் விமான கலசங்களுக்கு புனிதநீரால் குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா் சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.