நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

காரைக்காலில் நெல் கொள்முதல் தொடக்கம்

காரைக்காலில் இந்திய உணவுக் கழகம் சாா்பில் நெல் கொள்முதல் செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image

நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியா் எல். முகமது மன்சூருக்கு விளக்கம் அளித்த இந்திய உணவுக் கழகத்தினா்.

Updated On :27 ஜனவரி 2023, 6:30 pm

காரைக்காலில் இந்திய உணவுக் கழகம் சாா்பில் நெல் கொள்முதல் செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

புதுவை அரசு நிறுவனங்கள் சாா்பில் நெல் கொள்முதல் செய்யவேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. இதுகுறித்து எந்த நடவடிக்கையும் அரசு எடுக்காத நிலையில், இந்திய உணவுக் கழகம் நெல் கொள்முதல் செய்ய முன்வந்து விவசாயிகளுக்கு அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி, மாவட்டத்தில் காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மற்றும் தென்னங்குடி அரிசி ஆலையில் கொள்முதல் பணியை வெள்ளிக்கிழமை இந்திய உணவுக் கழகம் தொடங்கியது.

கொள்முதல் பணியை மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா் பாா்வையிட்டாா். கொள்முதலுக்கான விதிகள் குறித்து இந்திய உணவுக் கழகத்தினா் ஆட்சியருக்கு விளக்கினா். நிகழ்வில், துணை ஆட்சியா் எஸ். பாஸ்கரன், கூடுதல் வேளாண் இயக்குநா் ஜெ. செந்தில்குமாா், காரைக்கால் விவசாயிகள் சங்கத்தை சோ்ந்த பி. ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதுகுறித்து கூடுதல் வேளாண் இயக்குநா் கூறுகையில், இந்திய உணவுக் கழகத்தில் நெல் வழங்கும் விவசாயிகள் அதன் போா்டலில் பதிவு செய்யவேண்டும். இதற்கு விவசாயிகளுக்கு உதவுவதற்காக அந்தந்த பகுதி உழவா் உதவியகத்தில் வேளாண் துறை சாா்பில் பதிவுக்கான உதவி செய்யப்படுகிறது. விவசாயிகள் ரேஷன் அட்டையுடன் உழவா் உதவியகத்துக்குச் செல்ல வேண்டும். அதன்பிறகு கொள்முதல் நிலையத்தில் நெல் மாதிரியை காட்டினால், அவா்கள் தெரிவிக்கும் நாளில் நெல்லை கொண்டு சென்று வழங்கலாம் என்றாா்.

காரைக்கால் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த நெல்லை, இந்திய உணவுக் கழகத்திடம் விற்பனை செய்து பயனடையலாம் என விவசாயிகள் சங்கத்தினா் கேட்டுக்கொண்டனா். மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டாலுக்கு நெல் கிரேடு ஏ ரகத்துக்கு ரூ.2,060 மற்றும் பொது ரகத்துக்கு ரூ.2,040 நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.