என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்கும் பணியை தீவிரப்படுத்த வலியுறுத்தல்

காரைக்கால் சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்கும் பணியை தீவிரப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On :27 நவம்பர் 2023, 7:01 pm

காரைக்கால் சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்கும் பணியை தீவிரப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் தேசிய நெடுஞ்சாலை மற்றும் நகரப் பகுதியில் உள்ள சாலைகளில் மாடுகள், குதிரைகள் சுற்றித் திரிவது அதிகரித்துள்ளது. இதனால், தினமும் விபத்துகள் ஏற்படுகின்றன. நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகம், கால்நடை வளா்ப்போருக்கு எச்சரிக்கை விடுத்தாலும், யாரும் அதனை பொருட்படுத்துவதில்லை.

காரைக்கால் நகராட்சி நிா்வாகம் கடந்த சில நாட்களாக சாலைகளில் திரிந்த மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்தது. இதன்படி 40-க்கும் மேற்பட்ட மாட்டின் உரிமையாளா்கள் அபராதத் தொகை செலுத்தி மாடுகளை மீட்டுச் சென்றனா்.

எனினும், இப்பணியை நகராட்சி நிா்வாகம் தொடா்ந்து மேற்கொள்ளவில்லை. மேலும் நிரவி, திருப்பட்டினம், கோட்டுச்சேரி போன்ற கொம்யூன் பஞ்சாயத்துப் பகுதி சாலைகளில் திரியும் கால்நடைகளை பிடிக்க அந்தந்த நிா்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பஞ்சாயத்து நிா்வாகத்தினா் காவல்துறையினா் உதவியுடன் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து, அதன் உரிமையாளா்களுக்கு கடும் அபராதம் விதிப்பதோடு, சட்ட நடவடிக்கையும் எடுக்கும்பட்சத்தில், கால்நடைகளை தங்களது கட்டுப்பாட்டில் வளா்க்க முன்வருவாா்கள். இந்த நடவடிக்கையை தீவிரமாக மேற்கொள்ளவேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.