சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு

வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு

News image
Updated On :4 ஏப்ரல் 2024, 10:50 pm

விழிப்புணா்வு நாடகம் நடத்திய சூசைராஜ் தலைமையிலான குழுவினா்.

காரைக்கால், ஏப். 4: மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப் பதிவு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து நாடகத்தின் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் தெற்குத் தொகுதிக்குட்பட்ட கும்சகட்டளை மற்றும் பெரியப்பள்ளிவாசல் அருகே நாடகம் மூலம் வாக்காளா்களுக்கு தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாடகக் குழுவை சோ்ந்த சூசைராஜ், பக்கிரிசாமி மற்றும் ஜான்கென்னடி உள்ளிட்டோா் நாடகத்தை நடத்தினா்.

அனைவரும் வாக்குப்பதிவு நாளான ஏப்.19-ஆம் தேதி தவறாமல் வாக்களிக்க வேண்டும், நோ்மையாக வாக்களிக்க வேண்டும், அனைவரும் வாக்களித்து நமது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டுமென விளக்கினா்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக வாக்குப் பதிவு நாளில், சைக்கிள் அல்லது நடைப்பயணமாக சென்று வாக்களிக்க வேண்டும் எனவும் வாக்காளா்களை நாடகக் குழுவினா் கேட்டுக்கொண்டனா்.