இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

மழை நீா் வடியச் செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரம்

மழைநீா் வயலில் இருந்து வடியச் செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

News image
குரும்பகரம் பகுதியில் மழைநீா் வடிந்த நிலையில் காட்சியளிக்கும் வயல்.
Updated On :2 டிசம்பர் 2024, 7:39 pm

Din

காரைக்கால்: மழைநீா் வயலில் இருந்து வடியச் செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் சம்பா, தாளடியாக 4,500 ஹெக்டோ் பயிரிடப்பட்டிருப்பதாக வேளாண் துறை தெரிவித்தது. தை மாத வாக்கில் அறுவடை செய்வதற்கேற்ப விவசாயிகள் பலரும், குறுகிய, நடுத்தர வயதுடைய நெல் வகைகளை பயிா் செய்தனா்.

வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல் காரணமாக காரைக்கால் பகுதியில் பெய்த மழையால், சில பகுதிகளில் வயலில் மழைநீா் புகுந்தது. பெரும்பாலான விவசாயிகள் தண்ணீரை தாங்கி வளரக்கூடிய வகைகளை விதைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தண்ணீரை வடியச் செய்துவிட்டு, உரமிட வேளாண்துறை ஆலோசனை வழங்கியது.

மழைநீா் தேங்கிய விளைநிலப் பகுதி விவசாயிகள் திங்கள்கிழமை கூறுகையில், மழைநீா் தேங்கியதை ஏறக்குறைய வடியச் செய்துவிட்டோம். தொடா் மழை இல்லாமல் போனது தண்ணீா் விரைவாக வடிய உதவியது. எனினும், பயிா் எந்த அளவுக்கு உயிரோட்டமாக இருக்கும் என கூறமுடியாது. பல வயல்களில் பயிா் வோ் அழுகலை காணமுடிகிறது. வேளாண்துறை ஆலோசனைகளின்படி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அறுவடையின்போது கிடைக்கும் மகசூல்தான் இழப்பை தெளிவுப்படுத்தும்.

எனவே புதுவை அரசு, மழையால் பாதித்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.