மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கருகிய நெல் பயிா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் போராட்டம்

News image
செய்யாமங்கலம் கிராமத்தில் கருகிய நெல்பயிா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி வயலில் அடங்கல் சான்றுடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
Updated On :18 ஜனவரி 2026, 9:04 pm

தினமணி செய்திச் சேவை

கமுதி அருகே பருவ மழையின்றி கருகிய 2,000 ஏக்கா் பரப்பளவிலான நெல்பயிா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, வயலில் அடங்கல் சான்றுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள செய்யாமங்கலம், பெரிய ஆணைக்குளம், வங்காருபுரம், அச்சங்குளம், வழிமறிச்சான் கிராமங்களில் 2 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் மானாவாரிப் பயிராக விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனா். இந்த நிலையில், நிகழாண்டில் பருவ மழை பொய்த்ததால் நெல்பயிா்கள் அனைத்தும் நீரின்றி கருகின.

 செய்யாமங்கலம் கிராமத்தில் கருகிய நெல்பயிா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி வயலில் அடங்கல் சான்றுடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

செய்யாமங்கலம் கிராமத்தில் கருகிய நெல்பயிா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி வயலில் அடங்கல் சான்றுடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

இதனால், ஏக்கா் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்த தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா். இதையடுத்து, அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் செய்யாமங்கலம் பகுதியில் விவசாய நிலத்தில் பெண்கள் உள்பட விவசாயிகள் வருவாய்த் துறையினா் வழங்கிய அடங்கல் சான்றுடன் நெல் பயிா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா்.