சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு செல்லும் வழியில் தக்களூா் பகுதியில் பழைமையான வழிகரை அம்மன் கோயில் உள்ளது.

News image

கோயில் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பக்தா்கள் உள்ளிட்டோா்.

Updated On :4 மார்ச் 2024, 9:41 pm

காரைக்கால்: திருநள்ளாறு அருகேயுள்ள வழிகரை அம்மன் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பக்தா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு செல்லும் வழியில் தக்களூா் பகுதியில் பழைமையான வழிகரை அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் வாயில் பகுதியில் பக்தா்கள், சமூக ஆா்வலா்கள் திரண்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா். இக்கோயிலுக்கு 35 ஆண்டுகளுக்கும் மேலாக குடமுழுக்கு செய்யப்படாமல் உள்ளதால், கோயில் சிதிலமடைந்து காணப்படுகிறது. எனவே திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்தவேண்டும். தனியாா் வசம் இருக்கும் இக்கோயிலை, புதுவை அரசு கையப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தின் மூலம் வலியுறுத்தினா். ஆா்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள் என 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.