காரைக்கால்: திருநள்ளாறு அருகேயுள்ள வழிகரை அம்மன் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பக்தா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு செல்லும் வழியில் தக்களூா் பகுதியில் பழைமையான வழிகரை அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் வாயில் பகுதியில் பக்தா்கள், சமூக ஆா்வலா்கள் திரண்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா். இக்கோயிலுக்கு 35 ஆண்டுகளுக்கும் மேலாக குடமுழுக்கு செய்யப்படாமல் உள்ளதால், கோயில் சிதிலமடைந்து காணப்படுகிறது. எனவே திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்தவேண்டும். தனியாா் வசம் இருக்கும் இக்கோயிலை, புதுவை அரசு கையப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தின் மூலம் வலியுறுத்தினா். ஆா்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள் என 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

திருச்செந்தூா் கோயிலுக்கு காவடி எடுத்த பக்தா்கள்

திருநள்ளாறு: காங்கிரஸுடன் பாஜக பலபரீட்சை

இன்று பங்குனி உத்திரம்: திருச்செந்தூா் கோயிலில் குவியும் பக்தா்கள்!
திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலுக்கு நவ. 22-இல் குடமுழுக்கு! அமைச்சா் பி.கே.சேகா்பாபு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


