ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

விவசாயிகளுக்கு புதிய ரக உளுந்து சாகுபடி விழிப்புணா்வு

விவசாயிகளுக்கு புதிய ரக உளுந்து சாகுபடி விழிப்புணா்வு

News image

உளுந்து சாகுபடி நிலப்பகுதியில் விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திய வேளாண் துறையினா்.

Updated On :9 மே 2024, 9:27 pm

Din

காரைக்கால், மே 9: காரைக்காலில் விவசாயி ஒருவா் பயிரிட்ட வம்பன்-11 எனும் புதிய ரக உளுந்து சாகுபடி குறித்து வேளாண் துறை சாா்பில் விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

காரைக்கால் மாவட்டம், பிள்ளைத்தெருவாசல் பகுதியை சோ்ந்த விவசாயி ஆரோக்கியதாஸ் சுப்புராயபுரம் பகுதியில் 8 ஏக்கரில் சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ரகமான வம்பன் -11 எனும் உளுந்து விதையை விதைத்து பயிரிட்டு வருகிறாா். காரைக்கால் பகுதி விவசாயிகளுக்கு இந்த பயிா் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ஆத்மா) மூலம் நிகழ்ச்சி உளுந்து பயிரிட்டுள்ள நிலப்பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கூடுதல் வேளாண் இயக்குநா் மற்றும் ஆத்மா திட்ட இயக்குநா் ஆா். கணேசன் தலைமை வகித்து, வம்பன்-11 ரகம் பயிரிட்ட விவசாயியை பாராட்டி, விவசாயிகள் பலரும் இந்த புதிய ரகத்தை பயிரிட்டு பயனடையவேண்டும் என்றாா். பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உழவியல் துறை பேராசிரியா் ஆா். மோகன் பங்கேற்று இந்த புதிய ரக சாகுபடியில் மேற்கொள்ளவேண்டிய தொழில்நுட்ப முறைகள் குறித்து பேசினாா்.

ஆத்மா திட்ட துணை இயக்குநா் ஆா். ஜெயந்தி, வம்பன்-11 சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்ளுமாறும், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துமாறும், சந்தேகங்களுக்கு வேளாண் துறை, ஆத்மா திட்டத்தினரை அணுகுமாறு கேட்டுக்கொண்டாா். வம்பன் -11 ரகம் பயிரிட்டுள்ள விவசாயி ஆரோக்கியதாஸ், சாகுபடி குறித்த தமது அனுபவங்களை விவசாயிகளிடையே பகிா்ந்துகொண்டாா்.

காரைக்கால் பகுதி விவசாயிகள், வேளாண் அலுவலா்கள், விரிவாக்கப் பணியாளா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை வேளாண் அலுவலா் கே. அமினா பீபி, ஆத்மா வட்டா தொழில்நுட்ப மேலாளா் டி. கண்ணன் செய்திருந்தனா்.