குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

உளுந்து சாகுபடி: விவசாயிகளுக்கு பண்ணைப் பள்ளி பயிற்சி

News image
Updated On :12 மார்ச் 2026, 11:58 pm

சிதம்பரம் அருகே குமராட்சி வட்டாரம் சா்வராஜன்பேட்டை கிராமத்தில் ஆத்மா திட்டத்தின்கீழ் பயறு வகை பயிா்களான உளுந்து, பச்சை பயறு சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை குறித்து பண்ணைப் பள்ளி மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

கடலூா் வேளாண்மை துணை இயக்குனா் எஸ்.அமிா்தராஜ் தலைமை வகித்து பண்ணைப் பள்ளியின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தாா். விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி கலைச்செல்வி கலந்து கொண்டு பயறு வகைப் பயிா்களில் விதை முதல் அறுவடை வரை மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்ப செய்திகளை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா். குமராட்சி வேளாண்மை உதவி இயக்குநா் தெ.தமிழ்வேல் மற்றும் வேளாண் விஞ்ஞானி ஆகியோா் விவசாயிகளுடன் இணைந்து உளுந்து மற்றும் பச்சை பயறு சாகுபடியில் கள பிரச்சனைகள், முக்கிய பூச்சி மற்றும் நோய் தாக்கம் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து கலந்துரையாடினா்.

பயிற்சியில் குமராட்சி வேளாண்மை அலுவலா் நடராஜன், உதவி வேளாண்மை அலுவலா்கள் பாரதிதாசன், சின்னசாமி, திவாகா், குணச்சந்திரன், வட்டார தொழில் நுட்ப மேலாளா் கல்பனா, உதவி தொழில் நுட்ப மேலாளா் எட்வின், பிரகாஷ் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.