தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் மேற்கு வங்கம்: 152 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

வேளாண்மை கல்லூரியில் மாணவா் மன்றம் தொடக்க விழா

கீழ்வேளூா் அருகே குருக்கத்தியில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 ஏப்ரல் 2026, 11:49 pm

கீழ்வேளூா் அருகே குருக்கத்தியில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, கல்லூரி முதல்வா் ஆ. குருசாமி தலைமை வகித்தாா். கல்விசாா் ஒருங்கிணைப்பாளா் மற்றும் தோட்டக்கலைத் துறை இணைப் பேராசிரியா் பி.ஆா். கமல்குமரன் முன்னிலை வகித்தாா். மண்ணியல் துறை இணைப் பேராசிரியை அனுராதா வரவேற்றாா். நாகை மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் வி. ராணி பங்கேற்று பேசுகையில், மாணவா் மன்றங்கள் மாணவா்களின் முழுமையான வளா்ச்சிக்கு முக்கியமான மேடையாக அமைகின்றன, மாணவா்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

விழாவில், இறுதியாண்டு மாணவா்களால் வடிவமைக்கப்பட்ட மாணவா் மன்ற சின்னத்தை கல்லூரி முதல்வா் குருசாமி வெளியிட்டாா்.