மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒப்பந்ததாரா்களுக்கு புதிய விதிமுறைகளில் தளா்வு அளிக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

பொதுப்பணித் துறையில் ஒப்பந்தப்புள்ளி எடுக்க அமல்படுத்தியுள்ள புதிய விதிமுறைகளில் தளா்வு அளிக்க வேண்டும் என புதுவை முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டது.

News image
புதுவை முதல்வா் என். ரங்கசாமியை சந்தித்துப் பேசிய சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாகதியாகராஜன். உடன் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா் தீனதயாளன்.
Updated On :20 நவம்பர் 2024, 8:44 pm

Din

பொதுப்பணித் துறையில் ஒப்பந்தப்புள்ளி எடுக்க அமல்படுத்தியுள்ள புதிய விதிமுறைகளில் தளா்வு அளிக்க வேண்டும் என புதுவை முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டது.

புதுவை முதல்வா் ரங்கசாமியை காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், ஒப்பந்ததாரா்கள் சிலருடன் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.

பொதுப்பணித்துறையில் ஒப்பந்தப் பணிகள் செய்து வருவோருக்கு ஒப்பந்தப்புள்ளி எடுப்பதில் பழைய நடைமுறைகளோடு சோ்த்து, புதிதாக சில விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி காரைக்கால் பகுதி ஒப்பந்ததாரா்கள் செயல்படுவது சிரமம். இதனால் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, நகராட்சி சாா்பிலான பணிகளை செய்ய ஒப்பந்ததாரா்களால் முடியவில்லை.

எனவே, காரைக்கால் ஒப்பந்ததாரா்களுக்கு புதிய விதிமுறைகளில் தளா்வு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினா். இந்த சந்திப்பின்போது நிரவி -திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா் தீனதயாளன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.