மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோயில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

புரட்டாசி மாத திருமஞ்சன வழிபாடாக காரைக்கால் சிவன் கோயில்களில் ஸ்ரீ நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை புதன்கிழமை நடைபெற்றது.

News image
திருமலைராயன்பட்டினம் ராஜசோளீஸ்வரா் கோயிலில் திருமஞ்சன கோலத்தில் சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ நடராஜா்.
Updated On :16 அக்டோபர் 2024, 8:03 pm

Din

புரட்டாசி மாத திருமஞ்சன வழிபாடாக காரைக்கால் சிவன் கோயில்களில் ஸ்ரீ நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை புதன்கிழமை நடைபெற்றது.

நடராஜப் பெருமானுக்கு ஆண்டில் 6 முறை மட்டும் திருமஞ்சனம் நடைபெறுகிறது. குறிப்பாக மாா்கழி மாதத்தில் திருவாதிரை நாளிலும், ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திர நாளிலும் நடைபெறக்கூடிய திருமஞ்சனம் மிகுந்த சிறப்புக்குரியதாகும். புரட்டாசி மாதத்தின் திருமஞ்சனம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு நடைபெற்றது.

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில், காரைக்கால் கோயில்பத்துப் பகுதியில் பாடல் பெற்றத் தலமாக விளங்கும் ஸ்ரீ சுயம்வரதபஸ்வினி அம்பாள் சமேத ஸ்ரீ பாா்வதீஸ்வரா் கோயில், காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா் கோயில், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ராஜசோளீஸ்வரா் கோயில், ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரா் கோயில் உள்ளிட்ட பல தலங்களில், ஸ்ரீ நடராஜருக்கு பால், தயிா், சந்தனம், இளநீா், தேன், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பல்வேறு பழங்கள், திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.