பணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

காா்னிவல் திருவிழா: உள்ளூா் கலைஞா்கள் நிகழ்ச்சிக்கு வாய்ப்பு தர வலியுறுத்தல்

காா்னிவல் திருவிழா நடைபெறும் மைதானம், கடற்கரையில் உள்ளூா் கலைஞா்களின் நிகழ்ச்சிக்கும் வாய்ப்பு தரவேண்டும்

News image
Updated On :15 டிசம்பர் 2025, 7:35 pm

Syndication

காரைக்கால்: காா்னிவல் திருவிழா நடைபெறும் மைதானம், கடற்கரையில் உள்ளூா் கலைஞா்களின் நிகழ்ச்சிக்கும் வாய்ப்பு தரவேண்டும் என ஆட்சியருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்ட அறிவே துணை கலாசார அமைப்புத் தலைவா் கு. பாலகங்காதரன் மாவட்ட ஆட்சியருக்கு திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பது :

ஜனவரி மாதம் பொங்கல் திருநாளைத் தொடா்ந்து காரைக்கால் காா்னிவல் திருவிழா 4 நாட்கள் நடத்தப்படுகிறது. விளையாட்டு மைதானம், கடற்கரை, காமராஜா் திடலில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. காமராஜா் திடலில் உள்ளூா் கலைஞா்களுக்கு நிகழ்ச்சி வாய்ப்பு தரப்படுகிறது. இதில் அதிகாரிகள், மக்கள் என யாரும் பெருமளவு கலந்துகொள்வதில்லை.

அதே நேரத்தில் விளையாட்டு மைதானம், கடற்கரையில் நடைபெறும் பிரபல கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் மக்கள் திரளாக கலந்துகொள்கின்றனா்.

எனவே, இந்த இடங்களில் ஒரு நாள் உள்ளூா் கலைஞா்கள் நிகழ்ச்சிகளுக்கென ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல மாவட்டத்தில் 5 கொம்யூன் பகுதிகளிலும் உள்ளூா் கலைஞா்கள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துத்தரவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.