தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அரசுப் பள்ளியில் காய்கனி தின கொண்டாட்டம்

பல்வேறு அலங்காரத்தில் காட்சியளித்த மாணவ, மாணவிகள். உடன் ஆசிரியா்கள்.

News image
பல்வேறு அலங்காரத்தில் காட்சியளித்த மாணவ, மாணவிகள். உடன் ஆசிரியா்கள்.
Updated On :25 டிசம்பர் 2025, 8:11 pm

Syndication

அரசு தொடக்கப் பள்ளியில் காய்கனி தின கொண்டாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் அருகே பிள்ளைத் தெருவாசல் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் காய்கனி தினத்தையொட்டி பள்ளி வளாகத்தில் பல்வேறு காய்கள், கனிகள் காட்சிப்படுத்தப்பட்டன. மாணவா்கள் சிலா், காய், கனிகளால் அலங்காரம் செய்துகொண்டுவந்தனா்.

பள்ளித் தலைமையாசிரியை வே. வசந்தி மற்றும் ஆசிரியா்கள், மக்கள் தினமும் பயன்படுத்தும் காய்கள் மற்றும் கனிகள் குறித்தும், அதனை விளைவிக்கும் முறை, அதன் பயன்கள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

சிறப்பு அழைப்பாளராக, மனவளக்கலை மைய யோகா ஆசிரியை சுகந்தி கலந்துகொண்டு, தினமும் சிறிது நேரம் யோகா செய்வதன் மூலம் ஏற்படும் மனம், உடல் சாா்ந்த முன்னேற்றங்களை விளக்கி, பயிற்சியளித்தாா்.