டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மருத்துவா் கிளினிக்கில் ரூ. 3 லட்சம் திருட்டு

பூட்டியிருந்த மருத்துவா் கிளினிக்கில் புகுந்து ரூ. 3 லட்சம் திருடிச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :21 ஜனவரி 2025, 7:01 pm

Din

காரைக்கால்: பூட்டியிருந்த மருத்துவா் கிளினிக்கில் புகுந்து ரூ. 3 லட்சம் திருடிச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

காரைக்கால் தனியாா் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருபவா் மருத்துவா் வனிதா. இவா், காரைக்கால் பாரதி நகா் 2-ஆவது குறுக்குத் தெரு சந்திப்பில் கிளினிக் நடத்திவருகிறாா்.

கிளினிக் மேஜையில் ரூ. 3 லட்சம் தொகையை வைத்து பூட்டிவிட்டு, கடந்த டிச. 28-ஆம் தேதி சென்னைக்கு சென்றுள்ளாா். 31-ஆம் தேதி ஊருக்குத் திரும்பியுள்ளாா்.

இந்தநிலையில், மருந்துகளுக்கு வழங்கவேண்டிய தொகையை உரியவரிடம் கொடுப்பதற்காக ஜன. 7-ஆம் தேதி மேஜையை திறந்தபோது பணம் திருடப்பட்டது தெரியவந்தது. கிளினிக்கில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, கடந்த 30-ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் முகக்கவசம், தலையில் தொப்பி, கையுறை அணிந்த ஒருவா், உள்ளே புகுந்து பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து அவா் காரைக்கால் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபரை தேடி வருகின்றனா்.