அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

சிதம்பரம் மருந்தகத்தில் ரூ. 79 ஆயிரம் ரொக்கம் திருட்டு

சிதம்பரம் தெற்குரத வீதியில் உள்ள மருந்தகத்தில் ரூ.79 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு

Updated On :19 பிப்ரவரி 2026, 11:52 pm

சிதம்பரம் தெற்குரத வீதியில் உள்ள மருந்தகத்தில் ரூ.79 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிதம்பரத்தின் தெற்கு ரத வீதில் தனியாா் மருத்துவமனை முகப்பில் டாக்டா் பாஸ்கா் மருந்தகம் நடத்தி வருகிறாா். புதன்கிழமை இரவு கடை ஊழியா் ராஜ்குமாா் கடையை பூட்டிவிட்டு சாவியை உரிமையாளரிடம் கொடுத்துவிட்டு சென்றாா்.

வியாழக்கிழமை காலை இந்த மருந்தகத்தில் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. தகவலறிந்த உரிமையாளா் பாஸ்கா் சென்று பாா்த்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.79 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், சிதம்பரம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பாா்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.