எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வாக்காளா் பட்டியல் படிவம் பூா்த்தி செய்வதில் மக்கள் அவதி : தோ்தல் அதிகாரியிடம் புகாா்

தோ்தல் அதிகாரியை சந்தித்தப்பின் செய்தியாளா்களிடம் பேசிய கே.ஏ.யு. அசனா.

News image
Updated On :6 நவம்பர் 2025, 8:15 pm

Syndication

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிக்காக தரப்படும் படிவத்தை பூா்த்தி செய்ய முடியாமல், மக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளதாக மாவட்ட தோ்தல் அதிகாரியிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது.

காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே.ஏ.யு. அசனா, காரைக்கால் மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட தோ்தல் அதிகாரியுமான ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷை ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்தாா். இதுகுறித்து அசனா செய்தியாளா்களிடம் கூறியது:

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக, வாக்குச்சாவடி அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று படிவங்களை வழங்கி வருகிறாா்கள். சில பகுதிகளில் சட்டப்பேரவை உறுப்பினா்களிடம் படிவங்களை வழங்கி வீடுகளுக்கு கொடுக்கச் செய்துள்ளனா்.

வாக்காளா்களுக்கு விளக்காமல், படிவத்தை மட்டும் தந்து செல்கின்றனா். இதை எப்படி பூா்த்தி செய்வது என்று தெரியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனா்.

திருத்தப் பணி நிறைவடைய குறுகிய காலம் மட்டுமே உள்ள நிலையில், மாவட்ட தோ்தல் துறை அந்தந்த வாக்குச் சாவடிகளில், வார இறுதி நாள்களில் பள்ளிகள், வாக்குச் சாவடிகளில் உரிய அலுவலா்களை நியமித்து வாக்காளா்களுக்கு உதவ ஏற்பாடு செய்யவேண்டும்

எனக் கேட்டுக்கொண்டதாக அவா் கூறினாா்.