வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மாதூரில் வேளாண் வயல்வெளிப் பள்ளி தொடக்கம்

விவசாயிகளிடையே பேசிய கூடுதல் வேளாண் இயக்குநா் ஆா். கணேசன்.

News image
Updated On :6 நவம்பர் 2025, 8:14 pm

Syndication

நெல் விதை உற்பத்தி மற்றும் சான்றளிப்பு குறித்து வேளாண் வயல் வெளிப்பள்ளி மாதூரில் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

காரைக்கால் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின்கீழ் இயங்கும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் (ஆத்மா) மூலம் நெற்பயிரில் விதை உற்பத்தி மற்றும் சான்றளிப்பு குறித்து வேளாண் வயல் வெளிப்பள்ளி, தென்னங்குடி உழவா் உதவியகத்திற்குட்பட்ட மாதூா் கிராமத்தில் 6 வாரங்கள் நடைபெறவுள்ளன.

இதன் தொடக்க நிகழ்ச்சி மாதூா் அரசு விதைப் பண்ணையில் நடைபெற்றது.

காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் மற்றும் ஆத்மா திட்ட இயக்குநா் ஆா். கணேசன் தொடங்கிவைத்து, வேளாண் பள்ளியின் முக்கியத்துவம் குறித்தும், வேளாண் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், விதை உற்பத்தி மற்றும் விநியோகத்தில் அரசின் பங்கு குறித்துப் பேசினாா்.

பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியா் ராமநாதன் கலந்துகொண்டு, நெல் விதை உற்பத்தியின் முக்கியத்துவம், விதை உற்பத்தி செய்யும் முறை ஆகியவற்றை விளக்கிப் பேசினாா்.

முன்னதாக தென்னங்குடி வோண் அலுவலா் பி.அலன் வரவேற்றுப் பேசினாா். 30-க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.