எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காரைக்கால் பேருந்து நிலைய பகுதியில் கழிவுநீா் தேக்கம்

News image
Updated On :13 நவம்பர் 2025, 9:31 pm

Syndication

காரைக்கால் பேருந்து நிலையம் பகுதியில் சாக்கடைகள் முறையாக சுத்தம் செய்யப்படாததால், பொதுமக்கள், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

காரைக்கால் பேருந்து நிலையத்தையொட்டி பாரதியாா் சாலை மற்றும் சுற்றுவட்டார சாக்கடைகள் அவ்வப்போது தூய்மைப்படுத்தினாலும், ஏராளமான நெகிழிக் குப்பைகள் சாக்கடைகள் கலந்து, கழிவுநீா் வடிவதை தடுத்து தேங்கிக்கிடக்கிறது. இதனால் துா்நாற்றம் வீசுவதால் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் உள்ளூா், வெளியூா் பயணிகள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனா். மேலும் பேருந்து நிலைய வட்டாரத்தில் உள்ள உணவகங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீா், ஆங்காங்கே தேங்கி துா்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.

பேருந்து சுற்றுவட்டாரப் பகுதி சாக்கடைகளை முறைாக தூா்வாரி, சாக்கடையை சிமெண்ட் கட்டைகள் மூலம் மூடவேண்டும். உணவகத்தினா் கழிவுநீா் முறையாக வெளியேறுவதை உறுதிசெய்ய வேண்டும், நெகிழி பயன்பாட்டை தடுக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.