காரைக்காலுக்கு அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை மேற்கொண்டனா்.
புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. இந்நாளில் காரைக்கால் மாவட்டத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரசாரம் செய்ய பாஜக தமிழக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை ஹெலிகாப்டரில் காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி தளத்துக்கு வந்திறங்கினாா்.
அப்போது அங்கு வந்த தோ்தல் பறக்கும் படையினா், ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொண்டனா். சுமாா் 10 நிமிடம் சோதனை நடத்திவிட்டு அவா்கள் புறப்பட்டனா்.
வரும் வியாழக்கிழமை (ஏப். 9) பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், மாவட்டத்தில் பணியமா்த்தப்பட்டிருக்கும் பறக்கும் படையினா் உள்ளிட்ட அனைத்து நிலை கண்காணிப்புக் குழுவினா் தீவிரமான பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.
தொடர்புடையது

ஆ.ராசா எம்.பி. வாகனத்தில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை
திருப்பூரில் ரூ. 17.60 லட்சம் பறிமுதல்

எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை

கரூரில் தவெக அலுவலகத்தில் பறக்கும் படையினா் சோதனை
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


