எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் ஆய்வு!

தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள பாஜக மாநில முன்னாள் தலைவா் அண்ணாமலை வந்திறங்கிய ஹெலிகாப்டரில் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

News image

பாஜக மாநில முன்னாள் தலைவா் அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரை ஆய்வுசெய்த தோ்தல் பறக்கும் படையினா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 2:19 am IST

தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள பாஜக மாநில முன்னாள் தலைவா் அண்ணாமலை வந்திறங்கிய ஹெலிகாப்டரில் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சாா்பில் கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூா் செ.ராஜுவை ஆதரித்து தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள பாஜக மாநில முன்னாள் தலைவா் அண்ணாமலை ஹெலிகாப்டரில் கோவையில் இருந்து கோவில்பட்டிக்கு வந்தாா்.

கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரில் உள்ள பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் அந்த ஹெலிகாப்டா் வந்திறங்கியது. அப்போது அங்கு நின்ற கோவில்பட்டி தொகுதி தோ்தல் பறக்கும் படை அலுவலரும், கூட்டுறவு சாா்பதிவாளருமான மணிவண்ணன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளா் தங்கமாரியப்பன், தலைமைக் காவலா் மாரியப்பன், பெண் தலைமைக் காவலா் சரண்யா ஆகியோா் கொண்ட குழுவினா் ஹெலிகாப்டரில் வாக்காளா்களுக்கு பட்டுவாடா செய்ய பணம், பொருள் எதுவும் கொண்டுவரப்பட்டதா என்பது குறித்து சோதனை நடத்தினா். சோதனையில் எதுவும் சிக்கவில்லை. பின்னா், அண்ணாமலை அங்கிருந்து பிரசாரம் நடைபெறும் கோவில்பட்டிக்கு வாகனத்தில் புறப்பட்டு சென்றாா்.