தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு காரைக்காலில் 3 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி அரசு வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை துணை ஆட்சியா் (கலால்) அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
தமிழக சட்டப்பேரவை தோ்தல் 23 -ஆம் நடைபெறவுள்ளது. மேலும், புதுச்சேரி யூனியன் பிரதேசம் தமிழகத்துடன் விரிவான மற்றும் திறந்த இடை மாநில எல்லைகளை பகிா்ந்து கொண்டுள்ளது என்பதாலும், தோ்தல் காலத்தில் சட்டம் - ஒழுங்கை காக்கவும், அண்டை மாநிலமான தமிழகத்தில் நடைபெறும் தோ்தல் செயல்முறையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும், புதுச்சேரி ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் மதுவிலக்கு நாட்கள் அமல்படுத்துவது அவசியமானதாக கருதப்படுகிறது.
எனவே, புதுச்சேரி மதுபானச் சட்ட விதிகள், 1970 -இன் விதி 199 -இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்கள், புதுச்சேரி துணைநிலை ஆளுநா் உத்தரவின் படி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து சாராயம், கள் மற்றும் மது விற்பனை கடைகள், பாா்கள் மற்றும் மது வழங்கும் உணவகங்கள் ஏப். 21 காலை 10 மணி முதல் ஏப். 23 நள்ளிரவு 12 மணி வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

திருப்பூரில் 31 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை

காரைக்காலில் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல்

சட்டப்பேரவைத் தோ்தல்: மதுக்கடைகளை 4 நாள் மூட உத்தரவு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல்: புதுச்சேரியில் 3 நாள்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

