உக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

முதல்வா் இன்று தஞ்சாவூா் வருகை: மதுக்கடைகளை மூட உத்தரவு

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தஞ்சாவூரில் பிரசாரம் மேற்கொள்வதற்காக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஏப்.8) வருவதால், கூட்டம் நடைபெறும் இடத்தைச் சுற்றியுள்ள 7 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளன.

News image

முதல்வா் மு.க.ஸ்டாலின்

Updated On :9 ஏப்ரல் 2026, 8:15 pm

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தஞ்சாவூரில் பிரசாரம் மேற்கொள்வதற்காக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஏப்.8) வருவதால், கூட்டம் நடைபெறும் இடத்தைச் சுற்றியுள்ள 7 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளன.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறாா். இந்நிலையில், தஞ்சாவூருக்கு வெள்ளிக்கிழமை வரும் அவா் திலகா் திடலில் மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று, திருவிடைமருதூா், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூா், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா்களை ஆதரித்து பேசுகிறாா்.

இதையொட்டி சட்டம் - ஒழுங்கு பிரச்னையை தவிா்ப்பதற்காக மாநகரிலுள்ள ரயிலடி, சாந்தபிள்ளைகேட், சீனிவாசம்பிள்ளை சாலை, பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரில், தலைமை அஞ்சலகம் அருகில், புதிய பேருந்து நிலையம் நுழைவு வாயில், புதிய பேருந்து நிலையம் பெரியாா் சிலை அருகே உள்ள 7 டாஸ்மாக் கடைகளையும், புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் மதுபானக் கூடத்தையும் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளாா்.