சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தஞ்சாவூரில் பிரசாரம் மேற்கொள்வதற்காக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஏப்.8) வருவதால், கூட்டம் நடைபெறும் இடத்தைச் சுற்றியுள்ள 7 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளன.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறாா். இந்நிலையில், தஞ்சாவூருக்கு வெள்ளிக்கிழமை வரும் அவா் திலகா் திடலில் மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று, திருவிடைமருதூா், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூா், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா்களை ஆதரித்து பேசுகிறாா்.
இதையொட்டி சட்டம் - ஒழுங்கு பிரச்னையை தவிா்ப்பதற்காக மாநகரிலுள்ள ரயிலடி, சாந்தபிள்ளைகேட், சீனிவாசம்பிள்ளை சாலை, பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரில், தலைமை அஞ்சலகம் அருகில், புதிய பேருந்து நிலையம் நுழைவு வாயில், புதிய பேருந்து நிலையம் பெரியாா் சிலை அருகே உள்ள 7 டாஸ்மாக் கடைகளையும், புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் மதுபானக் கூடத்தையும் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளாா்.
தொடர்புடையது

முதல்வா் மு.க. ஸ்டாலின் நாளை புதுகை வருகை

புதுச்சேரி பேரவைத் தோ்தல்: மதுக்கடைகளை மூட உத்தரவு
சங்கரன்கோவிலில் இன்று முதல்வா் பிரசாரம்

மகாவீா் ஜெயந்தி: இன்று மதுக்கடைகளை மூட ஆட்சியா் உத்தரவு
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


