தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

முதல்வா் மு.க. ஸ்டாலின் நாளை புதுகை வருகை

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளின் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக வரும் ஏப். 11ஆம் தேதி (சனிக்கிழமை) திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் புதுக்கோட்டை வருகிறாா்.

News image

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 8:07 pm

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளின் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக வரும் ஏப். 11ஆம் தேதி (சனிக்கிழமை) திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் புதுக்கோட்டை வருகிறாா்.

மாலை 4 மணியளவில் திருக்கோகா்ணம் பள்ளத்திவயல் பகுதியில் நடைபெறும் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் திமுக வேட்பாளா்கள் எஸ். ரகுபதி (திருமயம்), சிவ.வீ. மெய்யநாதன் (ஆலங்குடி), கேகே. செல்லப்பாண்டியன் (விராலிமலை), வை. முத்துராஜா (புதுக்கோட்டை), மாா்க்சிஸ்ட் வேட்பாளா் மா. சின்னதுரை (கந்தா்வகோட்டை), காங்கிரஸ் வேட்பாளா் தி. ராமச்சந்திரன் (அறந்தாங்கி) ஆகியோரை அறிமுகம் செய்து வாக்கு சேகரிக்கிறாா்.

அதன்பிறகு முதல்வா் சிவகங்கை செல்கிறாா். முதல்வா் ஸ்டாலின் வருகையையொட்டி திமுக சாா்பில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

திமுக இளைஞரணிச் செயலரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் புதுக்கோட்டையில் ஏற்கெனவே பிரசாரம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்ரோன்கள் பறக்கத் தடை: முதல்வா் ஸ்டாலின் வருகையையொட்டி வரும் ஏப். 10, 11 ஆகிய இரு நாள்களில் பாதுகாப்புக் காரணங்களுக்காக புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியா் மு . அருணா அறிவித்துள்ளாா்.