தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வருகையையொட்டி தேனி மாவட்டத்தில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஏப். 17, 18) பட்டாசு வெடிப்பது, மலா் தூவது, டிரேன் பறக்க விடுவது ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் நடைபெறும் தோ்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஏப். 17) வருகிறாா். இதையடுத்து, மாவட்டம் முழுவதும் சிகப்பு பகுதியாக (தஉஈ ழஞசஉ) அறிவிக்கப்படுகிறது. பொதுக்கூட்டம் நடைபெறும் இடம், அவா் வரும் வழித்தடங்களில் பட்டாசு வெடித்தல், பலூன்களை பறக்க விடுதல், மலா்களை தூவுதல் ஆகியவை முற்றிலும் தடை செய்யப்படுகின்றன. மேலும், வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஏப். 17, 18) மத்திய அரசு பணிகளுக்காகவோ, நகராட்சி தொடா்புடைய சா்வே பணிகளுக்காகவோ, தனியாா் நிறுவனங்களின் பணிகளுக்காகவோ அல்லது எந்த வகையான விழாக்களுக்காகவோ ட்ரோன் (ஈதஞசஉ) மற்றும் தொலைவிலிருந்து இயக்கப்படும் விமான அமைப்பு (இண்ஸ்ண்ப் தங்ம்ா்ற்ங்ப்ஹ் டண்ப்ா்ற்ங்க் அண்ழ்ஸ்ரீழ்ஹச்ற் நஹ்ள்ற்ங்ம் (தடஅந) ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என்றாா் அவா்.
தொடர்புடையது

முதல்வர் வருகை! திருச்சி மாநகரில் இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை

திருச்சிக்கு வருகை தந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! மு.க. ஸ்டாலின், உதயநிதி வருகை!

மக்கள் துணையுடன் பல உயரங்களை அடைவது உறுதி: முதல்வா் மு.க. ஸ்டாலின் பெருமிதம்
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



