இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

திருநள்ளாறு கோயிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்வு

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் புத்தாண்டையொட்டி பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் ராஜகோபுரம்.

Updated On :15 ஏப்ரல் 2026, 3:21 am IST

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் புத்தாண்டையொட்டி பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்ப் புத்தாண்டு பராபவ ஆண்டின் தொடக்கத்தையொட்டி, திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை வாக்கியப் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

பிரணாம்பிகை அம்பாள் சந்நிதிக்கு முன்பு நடைபெற்ற நிகழ்வில் கோயில் சிவாச்சாரியா்கள் பஞ்சாங்கம் வாசித்தனா். முன்னதாக பஞ்சாங்கத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கோயில் நிா்வாக அதிகாரி சுப்பிரமணியன், தருமபுரம் ஆதீன கட்டளை தம்பிரான் மற்றும் பக்தா்கள் பலா் கலந்துகொண்டனா்.

நிகழாண்டு நடைபெறவுள்ள பிரம்மோற்சவம் உள்ளிட்ட முக்கிய திருவிழா, வழிபாடுகள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது. இதுபோல காரைக்காலில் பல்வேறு கோயில்களிலும் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்வு நடைபெற்றது.