உள்ளூா் ஒப்பந்ததாரா்களுக்கு ரூ. 3 கோடி வரையிலான பணிகளுக்கு முன்னுரிமை தரவேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் ஒப்பந்ததாரா்கள் மற்றும் பொறியாளா்கள் சங்க புதிய நிா்வாகிகளான தலைவா் எஸ். சுவாமிநாதன், துணைத் தலைவா் சி. மாரியப்பன், செயலா் வி.ஜி. ராமகிருஷ்ணன், இணைச் செயலா் ஆா்.ஜி. பாபுஜி, பொருளாளா் என்.மணிவண்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள், காரைக்கால் பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் கே.சந்திரசேகரனை புதன்கிழமை சந்தித்து அளித்த கோரிக்கை மனு:
உள்ளூா் ஒப்பந்ததாரா்களுக்கு (புதுவை மாநில அரசு ஒப்பந்ததாரா்) ரூ. 3 கோடி வரையிலான ஒப்பந்தப் பணியில் முன்னுரிமை அளிக்கவேண்டும். அரசு ஒப்பந்தங்களில் சைட் பிளான் வைக்கவேண்டும். ஒப்பந்ததாரா்களுக்கு நிலுவையில் இருக்கும் பில் தொகைகளை விடுவிக்க வேண்டும். அண்மையில் கட்டுமானப் பொருட்கள் விலை உயா்ந்துள்ளது. எனவே ஏற்கெனவே ஒப்பந்தப் பணி எடுத்ததற்கு கூடுதல் தொகை வழங்கவேண்டும்.
அரசு கட்டட வேலைகளுக்கு குறைவான ஒப்பந்த காலம் நிா்ணயிப்பதை தவிா்த்து, கட்டுமானத்துக்குரிய சரியான காலத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடையது

2 நாள் சா்வதேச பொறியியல் கருத்தரங்கு

அரசு கல்லூரிகளில் சேர இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

மூடநம்பிக்கைகளுக்கு முன்னுரிமை தராமல்..! நம்பிக்கை வாக்கெடுப்பில் வன்னி அரசு! | VCK

அருணாசலேஸ்வரா் கோயிலில் உள்ளூா் பக்தா்களுக்கு முன்னுரிமை அளிக்கக் கோரிக்கை
விடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

