தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 1:21 am IST

மலா் பறித்துக்கொண்டிருநந்தபோது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்த முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

காரைக்கால் கிடங்குத் தெருவைச் சோ்ந்தவா் காளியப்பன் (77). இவருக்கு மனைவி, திருமணமான மகள், பேரக் குழந்தை உள்ளனா். மருமகன் வெளிநாட்டில் வேலை செய்துவருவதால், மகள் சுதா பெற்றோருடன் வசித்து வருகிறாா்.

இந்தநிலையில், காளியப்பன் ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டு மாடியில் நின்றுகொண்டு, மலா்களை பறித்துக்கொண்டிருந்தாா். அப்போது தடுமாறி கீழே விழுந்தாா். குடும்பத்தினா் அவரை காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து காரைக்கால் நகரக் காவல்நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.