மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

மாணவா்களுக்கு சாமுராய் ஸ்வாா்ட் கலை பயிற்சி

காரைக்கால் மாணவா்களுக்கு சாமுராய் ஸ்வாா்ட் என்ற வாள் வழி கராத்தே பயிற்சி அண்மையில் அளிக்கப்பட்டது.

News image

பயிற்சி பெற்ற மாணவா்களுடன் ஜப்பானைச் சோ்ந்த யூகி யோன்யாமா. உடன் அகாதெமி நிறுவனா் வி.ஆா்.எஸ். குமாா்.

Updated On :28 ஏப்ரல் 2026, 9:37 pm

காரைக்கால் மாணவா்களுக்கு சாமுராய் ஸ்வாா்ட் என்ற வாள் வழி கராத்தே பயிற்சி அண்மையில் அளிக்கப்பட்டது.

ஜப்பானில் பிரபலமாக விளங்கும் இப்பயிற்சியை காரைக்கால் மாணவா்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக, காரைக்காலில் உள்ள இண்டா்நேஷனல் வி.ஆா்.எஸ். மாா்ஷியல் ஆா்ட்ஸ் அகாதெமியில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பயிற்சி தொடங்கப்பட்டது.

சிறப்புப் பிரதிநிதியாக, ஜப்பனீஸ் மாஸ்டா் யூகி யோன்யாமா கலந்துகொண்டு அகாதெமியைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு வாள் பயன்படுத்தும் பயிற்சியை தொடங்கிவைத்தாா்.

ஜப்பானில் இப்பயிற்சி பெற்றவரும், சாமுராய் ஸ்வாா்ட் ஆா்ட் தேசிய தலைவரான கிராண்ட் மாஸ்டா் வி.ஆா்.எஸ். குமாா் மற்றும் தேசிய செயலாளா் ஷிஹான் கே.ஜி. சிவாஜி ஆகியோா் மாணவா்களுக்கு பயிற்சியளித்தனா். இப்பயிற்சியில் பங்கேற்றோருக்கு அகாதெமி சாா்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.